முடிஞ்சு போச்சு.
சில நாளா என் ஓய்வு நேரத்துல பங்கெடுத்து என் நாளுல ஒன்னாகி போன கருவாச்சி காவியம் கடைசி பக்கம் வந்தாச்சு. இந்தா இந்தான்னு கடைசி வார்த்தையும் மனசில பதிஞ்சு போச்சு.
வெள்ளிதிரையில மண் வாசன மணந்துருக்கு பாரதிராசா காலத்துல. வெள்ள காகிதத்துல அதே வாசம் அடிச்சிருக்கு கருவாச்சி காவியத்துல.
"ஏன்டா இத்தன நாளு சும்மா தான கெடந்த, நா சந்தையில இறங்கி பல நாள் ஆச்சு, பல வீட்டு அலமாரியில என் வாழ்க்க பழசாகி போச்சு. எந்த ஊரு திருவிழாக்கு போச்சு உன் புத்தி ஊர விட்டு ஓடி போன காலு காசு கரஞ்சு போனதும் வீட்ட தேடி வார மாறி உன் புத்தி மழுங்கி போனதும் என்ன தேடி வாரியா நீ...!!" கருவாச்சி கேக்க.
ஏ..!! ஆத்தா, நிறுத்து உன் பாட்ட. கொஞ்ச நாளா புத்தகம் வாசிக்க புத்தியில்லாம போச்சு. எம் பொழப்பே சிரிப்பா சிரிக்க, நா எங்க உம் பொழப்ப படிக்க. களைப்பா போன என் மனசு உன்ன தேடி இளைப்பாற வந்திருக்கு வழிய விடுன்னு பெரட்ட ஆரம்பிச்சிட்டன் அவ வரலாற.
நா பக்கத்த வேகமா பெரட்டுறத விட பக்கத்துக்கு பக்கம் அவ வாழ்க்கய கள்ளிகாட்டு புழுதி மணல பெரட்டோ பெரட்டோன்னு பெரட்டிடான் ஆண்டவன். கருவாச்சின்னு நெறத்துக்கு ஏத்தாப்போல பேரு வச்சதுக்கு. பொழப்புகேத்தாபோல பேரு வெச்சிருகலாம் அழுகாச்சின்னு. எப்புடி தான் தாக்குபுடிச்சுதோ இந்த வெள்ள காயிதம் கண்ணீர சிந்தாம.
தரிசா இருந்த நிலத்துல மொளச்ச கருவேல மரமா போனான் கட்டையன் அவ வாழ்க்கையில. ஒண்ணுக்கும் ஒதவாது கருவேல மரம். ஆனா காஞ்ச முள்ளால கால தச்சிடும் மேல வெளஞ்ச நிலத்த பொட்டையாக்கிடும், வேற எந்த சீவ ராசியயும் வாழ வளர விடாது. அதபோல தான் அவன் கருவாச்சியயும் அவள ஒட்டுனவகளயும் பாடா படுதிட்டு தீக்கு இறையாக போற வயசுல புத்தி தெளிஞ்சான்.
தாய மதிக்காத புள்ள நாசமாதான் போகும்ன்னு சொல்லிட்டான் அழகுசிங்கம். வேசி வீட்டுக்கு போனப்பவே பொட்டாயாகி போனான் மவன். அதனால தான் ஆத்தாளும் அடையாளம் காணாம பண்ணிட்டான் ஆண்டவன். கொல குத்தம் பண்ணாலும், நீ அவளயே கொல்ல துணிஞ்சாலும், தடம் மாறி போனாலும் அதெல்லாம் இடம் இல்லாம போகுமடா தாய் பாசம் முன்ன.
மழ அடிச்சாலும் அளவா அடிக்கனும். அதுக்கேத்த வாய்கால வெட்டனும் இல்லனா பயிருல தண்ணி தேங்கி அது அழுகிபோயிரும். அதே தான், திம்சோட பாசத்துல திகட்ட திகட்ட மெய் மறந்து போனக சடையப்பரும் கட்டையனும். சொக்கி போனக ரெண்டு பேரும், பதாளத்துல தள்ளி மண்ணள்ளி மூடிட்டா பேயம்மா. கருவாச்சி புண்ணியத்துல சாவு தள்ளி போச்சு அவனுக்கு.
நா செயிக்குறனோ இல்லயோ, தோக்கமாட்டன்னு சொன்னா கருவாச்சி. சொல்ல செயலாக்கி காட்டிட்டால.
முடிவ நாம தான் எடுத்துக்கனும். அவ செயிச்சாலா இல்லயானு. ஆனா, அவ தோக்கலாயா.
கருவாச்சிய விமர்சனம் பண்ண எனக்கு அவள உருவாக்கின வைரமுத்த விமர்சனம் பண்ண தகுதி இல்ல.
இனி நான் ஆயிரம் புத்தகம் புரட்டலாம். அதெல்லாம் இந்த கள்ளி காட்டு இளவரசிக்கு ஈடாகுமா தெரியல.
சில நாளா என் ஓய்வு நேரத்துல பங்கெடுத்து என் நாளுல ஒன்னாகி போன கருவாச்சி காவியம் கடைசி பக்கம் வந்தாச்சு. இந்தா இந்தான்னு கடைசி வார்த்தையும் மனசில பதிஞ்சு போச்சு.
வெள்ளிதிரையில மண் வாசன மணந்துருக்கு பாரதிராசா காலத்துல. வெள்ள காகிதத்துல அதே வாசம் அடிச்சிருக்கு கருவாச்சி காவியத்துல.
"ஏன்டா இத்தன நாளு சும்மா தான கெடந்த, நா சந்தையில இறங்கி பல நாள் ஆச்சு, பல வீட்டு அலமாரியில என் வாழ்க்க பழசாகி போச்சு. எந்த ஊரு திருவிழாக்கு போச்சு உன் புத்தி ஊர விட்டு ஓடி போன காலு காசு கரஞ்சு போனதும் வீட்ட தேடி வார மாறி உன் புத்தி மழுங்கி போனதும் என்ன தேடி வாரியா நீ...!!" கருவாச்சி கேக்க.
ஏ..!! ஆத்தா, நிறுத்து உன் பாட்ட. கொஞ்ச நாளா புத்தகம் வாசிக்க புத்தியில்லாம போச்சு. எம் பொழப்பே சிரிப்பா சிரிக்க, நா எங்க உம் பொழப்ப படிக்க. களைப்பா போன என் மனசு உன்ன தேடி இளைப்பாற வந்திருக்கு வழிய விடுன்னு பெரட்ட ஆரம்பிச்சிட்டன் அவ வரலாற.
நா பக்கத்த வேகமா பெரட்டுறத விட பக்கத்துக்கு பக்கம் அவ வாழ்க்கய கள்ளிகாட்டு புழுதி மணல பெரட்டோ பெரட்டோன்னு பெரட்டிடான் ஆண்டவன். கருவாச்சின்னு நெறத்துக்கு ஏத்தாப்போல பேரு வச்சதுக்கு. பொழப்புகேத்தாபோல பேரு வெச்சிருகலாம் அழுகாச்சின்னு. எப்புடி தான் தாக்குபுடிச்சுதோ இந்த வெள்ள காயிதம் கண்ணீர சிந்தாம.
தரிசா இருந்த நிலத்துல மொளச்ச கருவேல மரமா போனான் கட்டையன் அவ வாழ்க்கையில. ஒண்ணுக்கும் ஒதவாது கருவேல மரம். ஆனா காஞ்ச முள்ளால கால தச்சிடும் மேல வெளஞ்ச நிலத்த பொட்டையாக்கிடும், வேற எந்த சீவ ராசியயும் வாழ வளர விடாது. அதபோல தான் அவன் கருவாச்சியயும் அவள ஒட்டுனவகளயும் பாடா படுதிட்டு தீக்கு இறையாக போற வயசுல புத்தி தெளிஞ்சான்.
தாய மதிக்காத புள்ள நாசமாதான் போகும்ன்னு சொல்லிட்டான் அழகுசிங்கம். வேசி வீட்டுக்கு போனப்பவே பொட்டாயாகி போனான் மவன். அதனால தான் ஆத்தாளும் அடையாளம் காணாம பண்ணிட்டான் ஆண்டவன். கொல குத்தம் பண்ணாலும், நீ அவளயே கொல்ல துணிஞ்சாலும், தடம் மாறி போனாலும் அதெல்லாம் இடம் இல்லாம போகுமடா தாய் பாசம் முன்ன.
மழ அடிச்சாலும் அளவா அடிக்கனும். அதுக்கேத்த வாய்கால வெட்டனும் இல்லனா பயிருல தண்ணி தேங்கி அது அழுகிபோயிரும். அதே தான், திம்சோட பாசத்துல திகட்ட திகட்ட மெய் மறந்து போனக சடையப்பரும் கட்டையனும். சொக்கி போனக ரெண்டு பேரும், பதாளத்துல தள்ளி மண்ணள்ளி மூடிட்டா பேயம்மா. கருவாச்சி புண்ணியத்துல சாவு தள்ளி போச்சு அவனுக்கு.
நா செயிக்குறனோ இல்லயோ, தோக்கமாட்டன்னு சொன்னா கருவாச்சி. சொல்ல செயலாக்கி காட்டிட்டால.
முடிவ நாம தான் எடுத்துக்கனும். அவ செயிச்சாலா இல்லயானு. ஆனா, அவ தோக்கலாயா.
கருவாச்சிய விமர்சனம் பண்ண எனக்கு அவள உருவாக்கின வைரமுத்த விமர்சனம் பண்ண தகுதி இல்ல.
இனி நான் ஆயிரம் புத்தகம் புரட்டலாம். அதெல்லாம் இந்த கள்ளி காட்டு இளவரசிக்கு ஈடாகுமா தெரியல.

No comments:
Post a Comment